கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பகிர்ந்து கொண்ட
கல்லூரிக்கால நினைவுகளுக்குப்பின்னர் இதோ... ஐந்து மாதங்கள் கடந்தோடி விட்டன. கிருஷ்ணன்கூட அவனுக்கே உரித்தப்பாணியில்
..என்ன தம்பி? இன்னமும் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டவில்லையா?....... என்று சென்றமுறை
பகிர்ந்து கொண்ட சைக்கிள் பயணத்திற்கு பிறகு பெரிய தொய்வு ஏற்பட்டதைப்பற்றி
குறிப்பிட்டிருந்தான். இரத்த ஒட்டத்துடன்
கலந்துவிட்ட கல்லூரி கால நினைவுகளை ஆயுள் முழுவதும் பகிர்ந்து கொள்ளலாமே என்ற
ஆழமான நம்பிக்கைத்தான் அவ்வப்பொழுது எடுத்துக்கொள்ளும் நீண்ட இடைவெளிக்கு
காரணம்.
கிருஷ்ணா விஷயத்தில் ஒரு வருத்தமான ஒரு நிகழ்வு என்னவென்றால் அவனும்
எங்களுடன் N.C.C யில் இருந்திருக்கிறான் என்பதையும்