Sunday, 29 July 2012

என் கனவுக்கல்லூரி!

இதுவரை கடந்து வந்த வாழ்வின் வழிகளில் நான் மிகமிக சந்தோஷமாகவும் சவுகரியமாகவும் வாழ்ந்த காலங்கள் நிச்சயமாக மதுரை சவுராஷ்டிரா கல்லூரியில் படித்த காலங்கள் தான். 

ப்ளஸ் 2 பள்ளி பொதுஇறுதி தேர்வு எழுதி முடித்ததும் அப்பாடா தொல்லை விட்டது என்ற எண்ணத்துடன் மதுரை வீதிகளை நண்பர்கள் சகிதம் உலா வந்து கொண்டிருந்தேன்.  எனது பள்ளித்தோழனான சீனிவாசனுடன் சுற்றாத இடங்களேயில்லை எனலாம்!! எவ்வளவு நாள் தான் சுற்றிக்கொண்டேயிருக்க முடியும்? ப்ளஸ் 2 ரிசல்ட் வருவதற்கான தினம் நெருங்க நெருங்க இதயத்தின் ஓசை காதுகளுக்கு அருகில் கேட்க ஆரம்பித்துவிட்டது.
Link