Monday, 27 August 2012

பேராசிரியர்களுடன் நாங்கள்!!

பேராசிரியை சாந்தா மேடம் எப்படி எங்களுக்கு ஆரம்பகாலங்களில் பீதியைக் கொடுத்தார்களோ? அதற்கு மாற்றமாக பேராசிரியர்களான பாலகிருஷ்ணன் சார் மற்றும் மோகன் சார் அவர்கள் மிகவும் நட்புடன் பழகியிருந்தார்கள். பாலகிருஷ்ணன் சார் மிக மிக அதிர்ஷ்டசாலி...! அவர் நடத்திய பாடங்களெல்லாமே easy ஆகவும் interesting ஆகவும் இருந்ததால் அவர் எடுக்கும் வகுப்புகளெல்லாம் ரொம்ப ஜாலியாய் கலகலப்பாயிருக்கும்.

Friday, 24 August 2012

நன்றி


இந்த தொடரில் என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும், என் சிறு சிறு தவறுகளை வலிக்காமல் தலையில் குட்டி தெரிவிக்கும், என்னை ஊக்குவிக்கும் வகையில் நல்ல நகைச்சுவையுடன் கூடிய comment களை அள்ளிக் குவிக்கும் எனது அன்பு நண்பர்களுக்கு எனது நன்றியை கூறிக்கொண்டு அவர்களுடைய comment களை (அத்தியாய வாரியாக) இங்கே பிரசுரிக்கிறேன்.

பி.கு. : (இவை alumni blog இல் பிரசுரிக்கப்பட்டவை)

Thursday, 16 August 2012

கல்லூரி களை கட்டுதல்!!

கல்லூரி வாழ்க்கையின் இனிமைகளை பலமுறை நண்பர்களுடன் பேசியிருக்கிறேன்.  பகிர்ந்திருக்கிறேன்.  ஆனால் முதல்முறையாக இப்போதுதான் எழுத்தில் பதிவு செய்கிறேன். அதனால் ஒரு வரலாற்றுப்பதிவு போல் கோர்வையாக சம்பவங்கள் நடந்த காலவரிசைப்படி எழுதவது என்பது கொஞ்சம் கடினமாகயுள்ளது. மேலும் பிடித்த விஷயங்கள் தானே உடனே ஞாபகத்திற்கு வரும். ஆகவே

Sunday, 5 August 2012

ஒரு புதிய திருப்பம்!!

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பசுமை நிறைந்த நினைவுகளே ! என்ற பாடலில் ஓர் அருமையான வரி வரும் “வரவறியாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே“ ஆனால் எங்கள் விஷயத்தில் வரவுமில்லாமல் செலவுமில்லாமல் மகிழ்ந்திருந்தோம்.  ஆம்! அந்த மூன்று வருடங்களும் நட்பு நதியில் நீந்தி பிரிய சாலையில் நடந்து பாச பயணமாகவே கழிந்தது.

கடுப்பு அடிக்கும் நண்பர்கள் இருந்தும் விடுப்பு எடுக்க விருப்பம் வந்ததில்லை!

படிப்பு எட்டாத உயரத்திலிருந்தும் கல்லூரிக்கு வந்து போக விரும்பும் துடிப்பு மட்டும் குறையவேயில்லை...........!
Link